Wiary Of A Mad Man

Entries categorized as ‘Uncategorized’

இலந்தை வடையும் உலகமயமாக்கலும்

September 1, 2008 · Leave a Comment

மாங்காயைக் கண்ட மசக்கைக்காரி போல், அந்த சிகப்பு நிற பாட்டிலைத் தாவி எடுத்து என் கூடையில் போட்டுக்கொண்டேன். காரணம், பாட்டிலின் மேல் ஆங்கிலத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள் - ”மாங்காயிஞ்சு ஊறுகாய்”.  இரவு உணவின் போது, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள, பெரிய கரண்டி ஒன்றினால் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஆள்காட்டி விரலினால் வழித்து எடுத்து வாயில் வைத்தேன். பெரும் ஏமாற்றம். பாட்டிலை எடுத்து கவனமாகப் படித்தேன். ”மாங்காய் இஞ்சு” என்று எழுதியிருந்தது.  பாட்டிலின் மேல் ஒட்டியிருந்த வண்ணப் படத்தில் மாங்காயும் இஞ்சியில் என்னைப் பார்த்து தனித் தனியாக கேலி செய்தன.

பத்து வருட அமெரிக்க வாழ்வில் மறந்து விட்ட சுவைகள் பல.  இந்தியப் பயணத்தில் போது சிலவற்றை சுவைக்க வாய்ப்புகள் கிடைக்கின்றது.  சிலவற்றை உணவு வகைகள் சுவைக்கக் கிடைப்பது கடினம்.  எழுதி வைத்து விட்டு மறந்துவிட வேண்டியதுதான்.  இதோ நான் எழுதி வைக்க விரும்புவைகளில் சில:

இலந்தை வடை:  பாட்டிக்கு மாத்திரம் எப்படிக் கிடைத்ததோ அவை தெரியவில்லை. புழுக்கள் இல்லாத, செக்கச் செவேலென்ற அழகிய சிறு இலந்தைப் பழங்கள். அவற்றைக் கொண்டு பாட்டி செய்த இலந்தை வடை மிகவும் சுவையானவை. கடையில் சரம் சரமாக தொங்க விடப் பட்டிருந்த இலந்தை வடைக்கும் பாட்டியின் இலந்தை வடைக்கும் உள்ள ஒரு மிகப் பெரும் வித்தியாசம், அதன் நிறம். கடை வடை கறுப்பாக இருக்கும், பாட்டியின் வடை சிகப்பாக இருக்கும். அச்சிறுவயதில் திண்பதில் தான் ஆர்வம், செய்முறையில் இல்லை. பாட்டி உரலில் இலந்தை பழங்களை இடிக்கும் காட்சி லேசாக நினைவுக்கு வருகிறது. இலந்தையின் புளிப்பும், சிகப்பு மிளகாயின் காரமும் சேர்ந்த புளி+காரச் சுவை இன்றளவும் நாக்கில் ஊறுகிறது. 

சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்த போது எனக்கு இலந்தை வடை கொண்டு வர முடியாததற்கு பாட்டி மிக வருத்தப்பட்டார். காரணம் உரலில் இடிப்பதற்கு அவர் கையில் வலு இல்லை, உரல் இருந்த வீடும் அவரிடம் இல்லை. அம்மா கடையிலிருந்து கருப்பு இலந்தை வடையை வாங்கிக்கொடுத்தார். அவற்றில் புளிப்பு இருந்தது காரம் இல்லை. இம்முறை ஊருக்குச் சென்றால் இலந்தை வடைக்காக வருத்தப்பட பாட்டி இல்லை.

கொடுக்காய்ப்புளி: சிறு வயதில், எங்கள் வீட்டில் இருந்ததை விட தெருவிலும், மற்றவர்கள் வீட்டிலும் வாழ்ந்த நாட்களே அதிகம். எங்கள் வீட்டு எதிர் வீட்டில் ஒரு கொடுக்காய்ப்புளி மரம். அந்த வீட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். மாடியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் கொடுக்காய்ப்புளி மரக்கிளைகள். எட்டாத கிளைகளை உலுக்க தொரட்டிக் கம்பு. எப்போதும் கொடுக்காய்ப்புளி வேட்டை. சில வருடங்களில் அந்த வீடு கைமாறியது. புதிதாக வந்த மனிதர்கள் மாறவில்லை. என் கொடுக்காய்வேட்டை தொடர்ந்தது. அப்பாவின் வேலை நிமித்தமாக மதுரையும் கொடுக்காயையும் விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டியதாயிற்று. நான் வேட்டையாண்ட அந்த கொடுக்காய் மரம் இன்னும் இருக்கிறதா, அல்லது செங்கல்லுக்கும் சிமெண்டிற்கும் வழிவிட்டு போய்ச்சேர்ந்து விட்டதா என்று தெரியவில்லை?

மாங்காய் இஞ்சு: ஒரே செடியில் (வேரில்?) எனக்குப் பிடித்த இரண்டு சுவைகள். இது ஊறுகாய்களின் ‘நிலைய வித்வான்’. சிறு வயதில் வீட்டிற்கு யாராவது திடீர் விருந்தாளியை அப்பா கூட்டிக்கொண்டு வந்து, “என்ன இரவுச் சாப்பாட்டிற்கு ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டால். “மத்தியானம் வச்ச சாம்பார் கொஞ்சம் மிச்சம் இருக்கு, நிலையவித்வான் வச்சுட்டா போச்சு” என்பார். டீ.வி வருவதற்கு முன், எல்லோர் வீட்டிலும் வானொலி ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.  பெரிய கலைஞர்களின் கச்சேரி இல்லையென்றாலோ, சிறு நேர இடைவெளிகளை நிரப்ப வேண்டுமென்றாலோ “வாத்ய விருந்தா – நிலைய வித்வான்கள் வாசிக்கிறார்கள்” என்று ஆரம்பித்து ஏதாவது இசையை போட்டு சமாளித்து விடுவார்கள். வீட்டில் ஊறுகாய் ஏதும் இல்லை என்றால், மாங்காயிஞ்சிதான் நிலைய வித்வான். செய்வது மிகச் சுலபம் (மாங்காயிஞ்சு + பச்சை மிளகாய் + எலுமிச்சை + உப்பு), ஆனாலும் எவ்வளவு சுவை. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் மாங்காயிஞ்சு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

விடுமுறையில் மிகவும் குறைந்த நாட்களுக்கே இந்தியா செல்வதால் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களோடு எங்களது பயணம் முடிந்து விடுகிறது. அங்கே, விதவிதமான பீட்சாக்களையும், பாஸ்தாக்களையும், டாகோசையும், பரீட்டோக்களையும் பார்க்க முடிகிறது. நான் சிறு வயதில் விரும்பிச் சாப்பிட்ட இலந்தை வடையையும், கொடுக்காயையும், நுங்கையும் பார்க்க முடியவில்லை. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை.

என் தேடுதல் சரியில்லையா, அல்லது அமெரிக்காவில் என் வீட்டுப் பக்கத்தில் உள்ள இந்தியப் பலசரக்குக் கடையில் மாவடு ஊறுகாய் கிடைக்கச் செய்யும், சென்னையில் வெஜிடபில் பிரமவேரா கிடைக்கச் செய்யும் உலகமயமாக்கல்  இலந்தை வடையையும் அவை இருந்த பெட்டிக் கடையையும் சாப்பிட்டுவிட்டதா?

(*)———————————-(*)——————————–(*)

பின் குறிப்பு:

வலையில் தேடியதில் கிடைத்த சில சுட்டிகள்:

 இலந்தை (Zizyphus Mauritiana) பற்றிய ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை.

மாங்காயிஞ்சு (Curcuma amada) பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு.

ஹவாயில் கிடைக்கும் கொடுக்காய்ப்புளி (Pithecolobium dulce)

மாங்காயிஞ்சு ஊறுகாய் போடும் முறை.

Categories: Uncategorized

“Take a shower” (A Zen Story)

July 20, 2008 · 1 Comment

The richest man in the town went to a Zen Master and said “Master, i have everything I ever wanted in life – I have a beautiful wife, a son and a daughter who are like my friends, trustful friends who are like my family, tons of money, and you name it and I have it. The only thing I lack is happiness. People say that you are the happiest man in the earth. And you look like one. What is the secret of your happiness? Can you make me happy?”

The Master said “Take a shower”.

The rich man was puzzled.  But he really wanted to be happy. He wanted to give it a try. He thought it was something related to his bath. He immediately called the finest architect in town and asked him to remodel his bathroom. Within 24 hours he got a remodeled bathroom. He took shower. He was not happy. So he went back to the Master and complained.

The Master said “Take a shower”.

The rich man thought, because Zen is a form of Buddhism and  Buddhism preaches non-violence, he should use organic soaps and shampoo, specifically products that did not use animal fat and products that were not tested on animals. He asked his assistants to buy such products. The assistants had tough time finding products to their master’s specifications. So the rich man ordered to set up a factory to manufacture bathroom products just for his use. He took a long shower. But he was not happy. He went back to the Master.

The Master said “Take a shower”.

This ritual went on for 44 days. The rich man kept on tweaking his bathroom and bathroom related activities. On 45th day, he took a Shower. And became Happy.

Postscript:
All these days when the rich man was taking shower, he was not really taking shower. He was deeply engrossed in his thoughts. He was either living in his past (thinking about his past mistakes) or living in the future (thinking about his  future projects). He never really was ‘present at-the-moment’.  Once he realized this and started ‘being in the present-moment’, he gained Wisdom and became Happy.

Categories: Uncategorized
Tagged:

என் வீட்டுத் தோட்டத்தில்

July 8, 2008 · 2 Comments

என் வீட்டு சுட்டிப் பயல் ஒரு இயற்கை விரும்பி.  என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூச்சிகளுக்கும் அவனைப் பிடிக்கும். குறிப்பாக அவனை முத்தமிடுவது அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஒன்று. கஷ்டம் எங்களுக்குத்தான். சுவடைப் பார்த்து – இது கொசு முத்தம், இது எறும்பு முத்தம், இது என்ன முத்தம் என்று தெரியவில்லை ஓடு மருத்துவரிடம் – என்று முத்தங்களுக்கேற்ப செயலாற்ற வேண்டும்.

நான் விதிவசத்தால் விவசாயியானவன் . வீட்டைச்சுற்றி புல்வெளி அதிகம். பெயர் தெரியாத செடிகளும் அதிகம். சில செடிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தால் அவை நம்மை வாட்டி எடுத்துவிடும். சில ஆண்டுகளில், இந்தச் செடிகள் போதாதென்று, என்னுள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி எழுந்து ”தக்காளி போடு, கத்தரிக்காய் போடு” என்று உசுப்பேற்றி விடுவான். நானும் ஏமாந்து போய் தக்காளி பொட்டிருக்கிறேன். என் வீட்டு தக்காளியின் வாளிப்பில் மயங்கியும் போயிருக்கிறேன். எல்லொரையும் போல், “யாமறிந்த தக்காளி ரசங்களிலே, என் வீட்டு ரசம் போல் எங்கும் சுவைத்ததில்லை” என்று பீத்திக் கொண்டும் இருந்திருக்கிறேன்.

தக்காளி

இந்த வருடம் எந்த சாகுபடியும் இல்லை. தக்காளி, கத்தரிக்காய் பாத்திகளில் ஏகப்பட்டச் பெயர் தெரியாச் செடிகள். வசந்தம் போய் வேனிற் காலம் வருவதற்குள் பாதி ஆள் (ஆறடி ஆள்) உயரத்திற்கு கிடு கிடுவென்று வளர்ந்து விட்டன. கூடவே அவற்றுடன் ஒட்டி உறவாட பெயர் தெரியாத பூச்சிகளும் பெறுகின. சுட்டிப் பயலின் முத்தங்களும் அதிகரித்தன.

மண்டிக் கிடந்த புதர்களை பார்க்க மலைப்பாக இருந்தது.  வாரங்கள் உருண்டோடின. புதர்கள் சுட்டிப் பயல் உயரத்தையும் தாண்டிவிட்டன. சென்ற வாரம், ஒருவாறாக இருப்பதிலேயே பெரிய செடியை புடுங்கலாம் என்று பாத்திக்குள் நுழைந்தேன். கைகள் ஒன்றன் பின் ஒன்றாக புடுங்கின. இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. பாத்தி சுத்தமாகி விட்டது. மன நிம்மதியுடன் ஒரு நல்ல குளியல் போட்டேன். புதர்கள் உணர்த்திய பாடங்களை மனது அசை போட்டது:

  • புதராவதற்கு முன்னமேயே வேண்டா விஷச் செடிகளை களைவது எளிது. நன்றாக வளர்ந்த பின் களைய அதிக உழைப்பு தேவைப்படும். (பு.ஆ: கெடுப்பது சோர்வு்)
  • புதராக வளர்ந்து விட்டால் கலங்காதே. ஒரு செடியை புடுங்க ஆரம்பி, எல்லா செடியும் தானாக வந்துவிடும். (பு.ஆ: சுமையினுக்கு இளைத்திடேல்)

இயற்கை நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கற்றுக் கொண்டேனா? பார்ப்போம்.

Categories: Uncategorized